» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு; ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!
புதன் 6, மே 2026 3:50:58 PM (IST)

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் (பொறுப்பு) அர்லேக்கரை தவெக தலைவர் விஜய் சந்தித்து உரிமை கோரினார்.
சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. இதற்கிடையே பெரும்பான்மையை நிரூபிக்க விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் விஜய் கோரி இருக்கிறார்.
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் இன்று தமிழகம் வந்தார். அவரை தவெக தலைவர் விஜய், தன் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேருடன் சென்று சந்தித்தார். தங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பட்டியல், காங்கிரஸ் தந்த ஆதரவு கடிதம் ஆகியவற்றை ஆளுநரிடம் வழங்கி, ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள கடிதத்தையும் அளித்தார்.
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. தவெக 108 இடங்களில் வென்றாலும், விஜய் 2 இடங்களில் வென்றதால் 107 என்பது தான் கணக்கு. தவெகவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சட்டசபையில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தங்களை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் விஜய் கோரியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லூரி மாணவியைக் கொலை செய்ய முயற்சி: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
புதன் 6, மே 2026 5:20:49 PM (IST)

தூத்துக்குடியில் த.வெ.க. பேனர் கிழிப்பு: திமுக பிரமுகர் கைது
புதன் 6, மே 2026 4:59:53 PM (IST)

ஸ்டாலின் உடன் ரஜினி சந்திப்பு: இக்கட்டான நேரத்தில் உறுதுணையாக இருப்பேன் என உறுதி!
புதன் 6, மே 2026 3:20:09 PM (IST)

த.வெ.க., ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு: 15 ஆண்டு கால திமுக கூட்டணி முறிவு!
புதன் 6, மே 2026 12:43:52 PM (IST)

த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பது முதுகில் குத்தும் செயல் - தி.மு.க. கடும் கண்டனம்!
புதன் 6, மே 2026 11:50:29 AM (IST)

ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்! - காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு விஜய் கடிதம்!
புதன் 6, மே 2026 11:10:32 AM (IST)


