» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பா.ஜ.க. மாநில நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர் முக்தார் கைது
புதன் 10, ஜூன் 2026 3:44:20 PM (IST)
தமிழக பாஜக மாநில நிர்வாகியும், இந்தியாவின் முதல் பெண் தேசிய மோட்டார் பந்தய சாம்பியனுமான அலிஷா அப்துல்லா குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய வழக்கில், பிரபல யூடியூபர் முக்தாரைக் கர்நாடக மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருபவர் அலிஷா அப்துல்லா. இவர் கடந்த வாரம் சென்னை காவல் பெருநகரக் கூட்டு ஆணையர் (போலீஸ் கமிஷனர்) அலுவலகத்தில், யூடியூபர் முக்தார் மற்றும் திருச்சி சூர்யா ஆகிய இருவர் மீதும் கண்ணீர்மல்கப் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இப்புகார் குறித்து அப்போது செய்தியாளர்களிடம் அவர் விவரித்ததாவது: "நான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொது வாழ்க்கைக்கு வந்து அரசியலில் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அந்தச் சமயம் முதலே முக்தாரும், திருச்சி சூர்யாவும் என்னைப் பற்றித் தொடர்ந்து அவதூறான கருத்துக்களைப் பேசி வந்தனர். தொடக்கத்தில் அதனை நான் பெரிதாகப் பொருட்படுத்தாமல் கடந்துவிட்டேன். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் வெளியிட்ட ஒரு காணொலியில் (வீடியோ), எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்து மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியுள்ளனர்.
ஒரு குழந்தையின் புகைப்படம் எனது முக அமைப்பிலும், மற்றொரு குழந்தையின் புகைப்படம் அண்ணாமலையின் முக அமைப்பிலும் இருப்பது போன்ற சித்திரப் பதிவை வெளியிட்டுப் பழிசுமத்தியுள்ளனர். இதனை என்னால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. பெண் என்றும் பாராமல் இத்தகைய அநாகரிகச் செயலில் ஈடுபட்ட அவர்கள் இருவர் மீதும் தற்போதைய தவெக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுகுறித்து காவல் ஆணையரிடம் விரிவாகப் பேசியுள்ளேன், அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்."
அலிஷா அப்துல்லா அளித்த இந்த அதிரடிப் புகாரைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரப் புலனாய்வில் இறங்கினர். இவ்வழக்கில் தொடர்புடைய திருச்சி சூர்யா அண்மையில் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கியக் குற்றவாளியான யூடியூபர் முக்தாரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பதுங்கியிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது.
அங்கு விரைந்த சென்னை தனிப்படை போலீசார், கர்நாடகாவில் வைத்து முக்தாரை நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முக்தாரைச் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் காவல் பிரிவினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி இணைப்பு: ஜூன் 12, 26 தேதிகளில் அமல்!
புதன் 10, ஜூன் 2026 5:38:18 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)

ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்: ஜூன் 12ஆம் தேதி போராட்டம் - விவசாயிகள் முடிவு!
புதன் 10, ஜூன் 2026 3:20:38 PM (IST)

தூத்துக்குடியில் பணத் தகராறில் வாலிபருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது - மேலும் 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 10, ஜூன் 2026 12:58:11 PM (IST)

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)


