» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது: அதிமுக வழக்கு!
திங்கள் 15, ஜூன் 2026 4:39:25 PM (IST)
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், அதற்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்களது பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகளைத் இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுகவின் சட்டப்பேரவைக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "கட்சித் தாவல் மற்றும் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாக இருந்த 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவைச் சட்டமன்றச் சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது. எனவே, சபாநாயகரின் இந்த முடிவின் அடிப்படையில் அந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முக்கிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வில் நாளை மறுநாள் (ஜூன் 17) விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த 4 தொகுதிகளின் விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:34:25 AM (IST)

மூதாட்டியைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:30:56 AM (IST)

த.வெ.க ஆட்சி குறித்து 3 மாதங்களில் வாக்காளர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள்: பாஜக சாடல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:12:44 AM (IST)

ஓமனில் தூத்துக்குடி மாலுமி மரணம்: குடும்பத்தினரை நேரில் சந்தித்து கீதாஜீவன் ஆறுதல்..!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:03:09 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

தொடர்கதையாகும் பாலியல் தொல்லைகள்: த.வெ.க அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 8:15:36 PM (IST)


