» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : சார் பதிவாளர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

செவ்வாய் 16, ஜூன் 2026 8:34:25 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையைத் தொடர்ந்து, 2 சார்பதிவாளர்கள் உட்பட 8 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி அருண் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் உள்ள 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த ஜூன் 4ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில், இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின் போது அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் (பொறுப்பு) பிரபாகர் (37), அலுவலக உதவியாளர் பால்ராஜ் (56), செல்வா வெங்கடப்பிரியா (35), சீதாலட்சுமி (40) மற்றும் ஆவண எழுத்தர்கள் அய்யம்பெருமாள் (57), பாலமுருகன் (56) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று, தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.55,500 ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாகத் தூத்துக்குடி கீழூர் சார்பதிவாளர் செல்வி (40) மற்றும் அனிதா (47) ஆகிய இருவர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அடுத்தகட்ட மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து

BabuJun 18, 2026 - 11:24:02 AM | Posted IP 104.2*****

sub regiter office thavira yevanum janjame vangala pola rto office pakkam poga solunga pa vali theriyama register off pakame suthitu iruknga pola

SundarajanJun 16, 2026 - 10:04:16 AM | Posted IP 104.2*****

ALSO RAID IN TIRUCHENDURE TALUK OFFICE AND SUBREGISTRAR OFFICE - STILL UNDER THE CONTROL OF BROKERS FROM D M K. A LOT OF MALPRACTICES GOING ON IN THESE OFFICES

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory