» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நள்ளிரவில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!
திங்கள் 29, ஜூன் 2026 4:26:44 PM (IST)
தூத்துக்குடியில் நள்ளிரவில் கார் மற்றும் சரக்கு வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (46). இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது கார் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அந்த வழியே குடிபோதையில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், முத்துக்குமாரின் கார் மற்றும் குட்டியானை வாகனத்தின் கண்ணாடிகளை திடீரென அடித்து உடைத்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பியோடினர்.
வாகனங்கள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு வெளியே வருவதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே ஒரு மாணவிக்கு ரூ.2.10 லட்சம் சம்பளத்தில் இரண்டு ஆசிரியர்கள் : கிராம மக்கள் குற்றச்சாட்டு!
புதன் 1, ஜூலை 2026 5:22:46 PM (IST)

குதிரை பேரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய் மீது நடவடிக்கை: ஆளுநரிடம் திமுக கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 5:08:49 PM (IST)

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் 3 பேர் அதிரடி கைது... பரபரப்புத் தகவல்கள்!
புதன் 1, ஜூலை 2026 4:25:13 PM (IST)

கன்னியாகுமரி அணுக்கனிம திட்டத்திற்கு ஓராண்டு கால நீட்டிப்பு: கனிமொழி எம்பி கண்டனம்!
புதன் 1, ஜூலை 2026 4:09:33 PM (IST)

தேசிய மருத்துவர்கள் தின விழா: டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
புதன் 1, ஜூலை 2026 3:43:35 PM (IST)

முதல்வர் விஜய் குறித்த அவதூறு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தாக்கல்!
புதன் 1, ஜூலை 2026 12:34:03 PM (IST)


