» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் விஜய் குறித்த அவதூறு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தாக்கல்!
புதன் 1, ஜூலை 2026 12:34:03 PM (IST)

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறான வகையிலும் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில், அரசியல் உள்நோக்கத்தோடு தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இம்மானு மீதான விசாரணை விரைவில் நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: தருமபுரி மாணவி அக்ஷிதா மாநில அளவில் முதலிடம்!
புதன் 1, ஜூலை 2026 12:23:54 PM (IST)

தேசிய மருத்துவர்கள் தினம் : மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி - முதல்வர் விஜய் வாழ்த்து!
புதன் 1, ஜூலை 2026 12:11:58 PM (IST)

பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதீர்: தற்கொலைக்கு முன் உருக்கமான வீடியோ வெளியிட்ட தொழிலதிபர்!
புதன் 1, ஜூலை 2026 12:06:54 PM (IST)

திரிவேணி சங்கம் கடற்கரையில் கலைத் திருவிழா நிறைவு: பாரம்பரியக் கலைஞர்களுக்கு பாராட்டு!
புதன் 1, ஜூலை 2026 10:34:10 AM (IST)

மதுபோதையில் தாயைத் தாக்கிய மகன் எரித்துக் கொலை : தூத்துக்குடியில் தந்தை வெறிச்செயல்!
புதன் 1, ஜூலை 2026 8:40:08 AM (IST)

மானிய மண்ணெண்ணெய் விலையை உயர்த்தக் கூடாது : தமிழக அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 8:34:54 AM (IST)


