» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

திங்கள்சந்தை உடையார்பள்ளம் அருகே உள்ள பெரியகுளத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மலைப்பாம்பைத் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாகப் பிடித்துச் சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை உடையார்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் உள்ள பெரியகுளத்தில் மீன் பிடிப்பதற்காக வழக்கம் போல் வலையை விரித்துச் சென்றுள்ளார். பின்னர் குளத்திற்கு வந்து வலையை எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் ஏதோ ஒரு பெரிய உருவம் சிக்குண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நெருங்கிச் சென்று பார்த்தபோது, மீன்களுக்குப் பதிலாக சுமார் 7 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று வலையிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் உடையார்பள்ளம் பெரியகுளப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்கள், குழந்தைகள் குறித்து அரசுக்கு அக்கறையில்லை: கனிமொழி சாடல்!
புதன் 8, ஜூலை 2026 5:09:17 PM (IST)

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

இப்போது தேர்தல் வந்தாலும் விஜய் 180 இடங்களில் ஜெயிப்பார்: வைகோ பேட்டி!
புதன் 8, ஜூலை 2026 4:21:22 PM (IST)

கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது : வங்கி மேலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 8, ஜூலை 2026 4:05:56 PM (IST)

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:22:30 PM (IST)

குதிரை பேரம் விவகாரம்: செந்தில் பாலாஜி முன் ஜாமீன் மனு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு!
புதன் 8, ஜூலை 2026 12:55:44 PM (IST)


