» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்கள், குழந்தைகள் குறித்து அரசுக்கு அக்கறையில்லை: கனிமொழி சாடல்!

புதன் 8, ஜூலை 2026 5:09:17 PM (IST)

KanimozhiJL08.jpg

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அரசுக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்பி, "தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அரசுக்கு உண்மையில் அக்கறை இருக்கிறதா? ஏனெனில் இது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இவ்வளவு அதிகமான வழக்குகள் பதிவாகியும், அவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது இதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "குழந்தைகளைத் துன்புறுத்தும் சம்பவங்களும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்திருக்கும் நிலையிலும், நடப்பவை குறித்து அரசுக்கு எந்தவிதக் கவலையோ அல்லது அக்கறையோ இருப்பதாகத் தெரியவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு விஷயம் சரியாகச் செயல்படாதபோது, அதன் விவரங்கள் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. 

பலனளிக்காத ஒன்றைப் பற்றிப் பேசுவதில் என்ன பயன்? மேலும், அவர்களுமே கூட எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர்களுக்குப் போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்களுக்கு, முதலில் அதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஏதேனும் ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னால், அரசு தான் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து

முருகன்Jul 8, 2026 - 06:14:02 PM | Posted IP 172.7*****

2ஜி குற்றவாளி

ஓட்டு போட்ட முட்டாள்Jul 8, 2026 - 05:53:42 PM | Posted IP 162.1*****

5 வருஷம் ஆட்சியில் இருக்கும்போது ஈ ஈ ஈ இளிச்சதோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory