» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூட்டுறவு வங்கியில் துணிகரக் கொள்ளை முயற்சி : லாக்கரை உடைக்க முடியாதால் நகை தப்பியது

ஞாயிறு 5, ஜூலை 2026 2:28:21 PM (IST)

எட்டயபுரம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து லாக்கரைத் திறக்க முயன்ற துணிகரக் கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெள்ளையம்மாள்புரம் கிராம கூட்டுறவு கடன் சங்கத்தில் நேற்று மாலை 4:00 மணியளவில், வழக்கம்போல் பணிகள் முடிந்ததும் அங்கிருந்த எழுத்தர் மாரீஸ்வரி கட்டிடத்தின் கதவுகளைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை கூட்டுறவு சங்கச் செயலாளர் செல்வகுமார் (56), என்பவர் சங்கத் திறப்பிற்காக வந்துள்ளார். அப்போது கூட்டுறவு கடன் சங்கக் கட்டிடத்தின் முன் பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், அங்கிருந்த முக்கிய லாக்கரை பலவந்தமாக உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக லாக்கர் உடையாததால் உள்ளே இருந்த பணம் மற்றும் நகைகள் தப்பியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் விரைந்து தடயங்களைச் சேகரித்தனர். லாக்கரை உடைக்க முடியாததால் சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் பத்திரங்கள் தப்பியது. இத்துணிகரக் கொள்ளை முயற்சி குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory