» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் : குமரி - கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு!
சனி 4, ஜூலை 2026 5:54:47 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பணிமனையைச் சார்ந்த அரசுப் பேருந்து ஒன்று, குமரி - கேரள எல்லைப் பகுதி வழியாகப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எல்லைப் பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென அரசுப் பேருந்தை நோக்கிப் பெரிய கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாகப் பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் அனைவரும் பெரும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல் வீச்சுச் சம்பவம் குறித்துப் பேருந்து ஓட்டுநர் எல்லைப் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்திவிட்டுத் தலைமறைவான மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். எல்லைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் பேரம், உளவுத்துறை அச்சுறுத்தல் : ஆளுநரைச் சந்தித்து திமுக பிரதிநிதிகள் புகார்!
சனி 4, ஜூலை 2026 8:57:44 PM (IST)

த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ₹180 கோடியில் சதித்திட்டம்: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்!
சனி 4, ஜூலை 2026 5:41:06 PM (IST)

மக்கள் வரிப்பணம் ரூ.1.53 கோடி வீணடிப்பு? பாரதியார் நினைவு இல்லச் சீரமைப்பில் முறைகேடு புகார்!!
சனி 4, ஜூலை 2026 4:45:48 PM (IST)

ஜூலை 10-ல் கட்டாயம் ஆஜர்: நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் இறுதி உத்தரவு!
சனி 4, ஜூலை 2026 12:20:54 PM (IST)

மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டன் பயணம்: விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு!
சனி 4, ஜூலை 2026 12:02:25 PM (IST)

தவெக ஆட்சியில் 151 பாலியல் குற்றங்கள், 85 படுகொலைகள்: ஆளுநரிடம் பாஜக புகார்!
சனி 4, ஜூலை 2026 11:49:13 AM (IST)


