» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்? கோழி வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:55:48 AM (IST)

கறிக்கோழிக்குத் தீவனக் கட்டுப்பாடு நெறிமுறைகளை அரசு அமல்படுத்தாவிட்டால், தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்குக் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்திப் போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு மாநிலச் செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, மாநிலத் தலைவர் துரைராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கறிக்கோழிக்குத் தீவனக்கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை, அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உடனடியாக எடுத்துரைக்க வேண்டும்.
கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பும் தீவனம் வழங்கப்படுவதால், அவற்றின் எடை செயற்கையாகக் கூட்டப்படுகிறது. மேலும், உடலில் தங்கியிருக்கும் தீவனம் முழுமையாக ஜீரணமாகாமல் இருப்பதன் காரணமாகக் கழிவுகள் வெளியேறிச் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நெறிமுறையைக் கோழி உற்பத்தியாளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த நியாயமான கோரிக்கையை அரசு ஏற்காத பட்சத்தில், அதனைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்குக் கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தச் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினம் உள்ளிட்ட இறைச்சி விற்பனை தடை நாட்களிலும் கறிக்கோழி விற்பனைக்குத் தனி அனுமதி வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் கோழிக்கழிவுகளை அகற்றும் நவீனக் கூடங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க அரசு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளிகளில் முழுமையான வானவியல் பாடத்திட்டம் தேவை: தமிழக அரசுக்கு டாஸ் பொதுக்குழு வலியுறுத்தல்!
ஞாயிறு 12, ஜூலை 2026 6:58:49 PM (IST)

ஆழ்துளைக் கிணறு தோண்டிய போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:40:55 AM (IST)

திமுகவினர் ஓடி ஒளிபவர்கள் அல்ல: அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 12, ஜூலை 2026 9:20:58 AM (IST)

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)

கரூர் 3,084 ஏக்கர் நில விவகாரம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு
சனி 11, ஜூலை 2026 5:26:04 PM (IST)


