» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)
நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் இன்று முதல் கூடுதலாக ஒரு படுக்கை வசதி முன்பதிவு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே செய்திக் குறிப்பில் "பயணிகளின் தேவையை முன்னிட்டு நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி முன்பதிவு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது. இக்கூடுதல் பெட்டி இணைப்பின் மூலம், காத்திருப்போர் பட்டியலில் உள்ள 72 பயணிகள் பயணிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் கால அட்டவணை:
நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயில்: நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயிலில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 30, 2026 வரை இக்கூடுதல் படுக்கை வசதிப் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுச் சேவை வழங்கப்படும்.
கோவை - நாகர்கோவில் அதிவிரைவு ரயில்: மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயிலில் இந்த கூடுதல் பெட்டி இணைப்பு நடைமுறை ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை தொடரும் எனத் தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் புதிய பேருந்து நிலைய விவகாரம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 17, ஜூலை 2026 5:12:51 PM (IST)

நீட் முறைகேடு போராட்டம்: சோனம் வாங்சுக்குடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த சீமான் கோரிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:53:33 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
வெள்ளி 17, ஜூலை 2026 3:27:42 PM (IST)

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி நீக்கம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:18:32 AM (IST)


