» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோ இருந்த செல்போன் பறிப்பு: த.வெ.க. பிரமுகர் கைது!

வியாழன் 13, ஆகஸ்ட் 2026 8:44:02 AM (IST)

ஆறுமுகநேரி அருகே த.வெ.க. பெண் நிர்வாகியிடம் ரகசிய வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படும் செல்போனைத் திருடிச் சென்ற விவகாரத்தில், நாடகமாடிய அக்கட்சியின் மற்றொரு நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி ரோஹிணி (35). தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர், கடந்த ஜூன் 26-ஆம் தேதி ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் மொபட்டில் நின்றபடி, த.வெ.க. உறுப்பினரான ஆலந்தலை தெற்கு தெருவைச் சேர்ந்த சிபாஸ் (28) என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மொபட்டில் வைக்கப்பட்டிருந்த ரோஹிணியின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பினார். அவரைப் பிடிப்பது போலச் சென்ற சிபாஸ், மர்ம நபர் தப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். இது குறித்து ரோஹிணி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மணப்பாடு பகுதியைச் சேர்ந்த த.வெ.க. உறுப்பினர் ரூஸ்வெல்ட் (44) என்பவருக்கும் ரோஹிணிக்கும் பழக்கம் இருந்துள்ளது. கட்சியில் பொறுப்பு வாங்கித் தருமாறு ரூஸ்வெல்ட் கேட்டு வந்த நிலையில், இருவரின் பழக்கம் தொடர்பான சில ரகசிய வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் ரோஹிணியின் செல்போனில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய ரூஸ்வெல்ட், செல்போனைக் கைப்பற்ற சிபாஸின் உதவிய நாடியுள்ளார். இதற்காக சிபாஸ், தனது நண்பரான உடன்குடி புனிதராஜ் என்பவரை வைத்து நாடகமாடிச் செல்போனைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்துச் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்த சிபாஸை போலீசார் கைது செய்தனர். 

செல்போனைப் பறித்துச் சென்ற புனிதராஜ் ஏற்கனவே வேறு வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ளார். தற்போது புனிதராஜிடம் இருந்து செல்போனைப் பெற்று தலைமறைவாக உள்ள த.வெ.க. உறுப்பினர் ரூஸ்வெல்ட்டை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவரைப் பிடித்த பிறகே செல்போனில் இருந்த ரகசிய வீடியோக்கள் குறித்த முழு விவரமும் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

BalaAug 13, 2026 - 10:10:59 AM | Posted IP 172.7*****

ada pikkali neeyum oru paaliyal naayaa poda roosvelt

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory