» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் திருவிழா தொடக்கம்: 10 நாட்கள் கோலாகலம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:10:20 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா இன்று காலை தொடங்கியது.
கேரள மக்களின் அறுவடைத் திருநாளாகவும், வசந்த விழாவாகவும் விளங்கும் ஓணம் பண்டிகை, சாதிமத பேதமின்றி உலகெங்கிலும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள அரசால் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் இவ்விழா, தமிழகப் பகுதியில் அமைந்திருந்தாலும் கேரளத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனையிலும் 10 நாட்கள் பாரம்பரியமாக நடத்தப்படுவது வழக்கம்.
இன்றைய தினம் அரண்மனை முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் பந்தலில், அரண்மனை அதிகாரி சது குத்துவிளக்கேற்றி ஓணம் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். கேரளப் பாரம்பரிய உடை அணிந்து வந்த அரண்மனை பெண் ஊழியர்கள், வண்ண மலர்களால் அழகிய அத்தப்பூ கோலமிட்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அரண்மனையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து பெண் ஊழியர்கள் ஆடி மகிழ்ந்ததுடன், ஊழியர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் உற்சாகமாக நடத்தப்பட்டன. இன்றிலிருந்து வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தினமும் ஒரு புதிய வடிவத்தில் அழகிய அத்தப்பூ கோலங்கள் இடப்படவுள்ளன.
மேலும், பாரம்பரிய ஓண விருந்து (ஓணசத்யா) மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. ஓணம் திருவிழாவையொட்டி பத்மநாபபுரம் அரண்மனை வளாகமும் அதன் கட்டிடங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாணியக்குடியில் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:13:26 PM (IST)

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது மட்டுமே தவெக ஆட்சியின் 100 நாள் சாதனை: இபிஎஸ் விமர்சனம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:40:26 PM (IST)

பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் : தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

செல்போனை பறிமுதல் செய்ததால் விரக்தி: கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:49:43 PM (IST)

அமைச்சர் பேசியதற்கு மன்னிப்பு காேரிய முதல்வர் விஜய் : சட்டப்பேரவையில் பரபரப்பு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 3:20:18 PM (IST)

தேசியக் கொடியேற்றியபோது பலியான கணவர் : நஷ்டஈடு கோரி மூதாட்டி 50 ஆண்டுகால போராட்டம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 12:49:47 PM (IST)


