» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

புதன் 26, ஆகஸ்ட் 2026 10:46:24 AM (IST)

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

வருகிற 27ஆம் தேதி பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூரில் உள்ள திருக்கோவில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகளவு இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆகவே இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை போன்ற முக்கிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூருக்கு 25.08.2026, 26.08.2026 27.08.2026 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆகவே, திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூரில் உள்ள திருக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் இச்சிறப்பு பேருந்து இயக்கங்களை முழுமையாக பயன்படுத்தி, தங்களின் பயணத்தினை இனியதாக்கிக்கொள்ள தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory