» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி

சனி 20, செப்டம்பர் 2025 8:55:45 AM (IST)



தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணியில்  மாநில அளவிலான மின்னொளி பெண்கள் கபடி போட்டி நடந்தது.

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி இந்திராநகரில் மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 48 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் தென்காசி வாசுதேவநல்லூர் வியாசகல்லூரி அணி முதல் பரிசையும், தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி அணி 2-வது பரிசையும், தென்காசி காலத்திமடம் இளம்புயல் அணி 3-வது பரிசும், ராமநாதபுரம் புனவாசல் ஏ.பி.எல் அம்மான் அணி 4-வது பரிசும் பெற்றனர். சிறந்த ரைடர், கேச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி.கவியரசன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் விழா கமிட்டியினர் வைரமுத்து, ராஜேந்திரன், ராமச்சந்திரன், தங்கமாரிமுத்து, கனகராஜ், மனோஜ்மாரிமுத்து, ஊர்தாதலைவர் ஆறுமுகசாமி, செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர்கள் தங்கராஜ், பொன்னுசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory