» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி
சனி 20, செப்டம்பர் 2025 8:55:45 AM (IST)

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணியில் மாநில அளவிலான மின்னொளி பெண்கள் கபடி போட்டி நடந்தது.
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி இந்திராநகரில் மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 48 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் தென்காசி வாசுதேவநல்லூர் வியாசகல்லூரி அணி முதல் பரிசையும், தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி அணி 2-வது பரிசையும், தென்காசி காலத்திமடம் இளம்புயல் அணி 3-வது பரிசும், ராமநாதபுரம் புனவாசல் ஏ.பி.எல் அம்மான் அணி 4-வது பரிசும் பெற்றனர். சிறந்த ரைடர், கேச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும், நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி.கவியரசன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் விழா கமிட்டியினர் வைரமுத்து, ராஜேந்திரன், ராமச்சந்திரன், தங்கமாரிமுத்து, கனகராஜ், மனோஜ்மாரிமுத்து, ஊர்தாதலைவர் ஆறுமுகசாமி, செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர்கள் தங்கராஜ், பொன்னுசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஓமனை 21 ரன்களில் வீழ்த்திய இந்தியா!
சனி 20, செப்டம்பர் 2025 10:32:36 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4 சுற்று அட்டவணை!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:46:29 PM (IST)

சர்வதேச கால்பந்து உலக தரவரிசை: இந்தியா 134வது இடம்!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:02:22 PM (IST)

ஐசிசி டி20 தரவரிசை: வருண் சக்கரவர்த்தி முதலிடம்!
புதன் 17, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

மேட்ச் ரெஃப்ரீயை நீக்க முடியாது: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
புதன் 17, செப்டம்பர் 2025 10:58:42 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:41:37 PM (IST)
