» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (திருநெல்வேலி)

கிரேஸ் பொறியியல் கல்லூரியில் உலக புகையிலை ஒழிப்பு தினம்!

புதன் 31, மே 2023 8:15:25 PM (IST)


கிரேஸ் பொறியியல் கல்லூரியில் "நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல”  என்ற தலைப்பில் விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரிச்சர்டு தலைமை வகித்து வரவேற்புரை வழங்கினார்.   மதுரம் பிரைட்டன், துணை இயக்குநர் சுகாதார பணிகளின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் " நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல” என்பதை குறித்து உரையாற்றினார்.  ஆ.வேணுகா, மாவட்ட ஆலோசகர், புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். ரொசாரி பாத்திமா, சமூக பணியாளர்,  2003 சட்டத்தை பற்றி விளக்கினார். கென்னடி, இயக்குநர், மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களால் கலைநிகழ்ச்கிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாவணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.  மேலும்,  கிருஷ்ணாராதாகிருஷ்ணன், இயக்குநர், தழிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கம், பானுமதி, இயக்கநர், லீடு டிரஸட் தொண்டு நிறுவனம் செல்வி.அழகு லெட்சுமி  பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் மற்றும் கிரேஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory