» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மின்சாரம் தாக்கி 4 குழந்தைகள் பலி: உத்திரப் பிரதேசத்தில் சோகம்
திங்கள் 20, நவம்பர் 2023 10:08:26 AM (IST)
உ.பி.யில் மின்விசிறி அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், பாரசக்வார் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் சரோஜ் வீட்டில் மின்விசிறி அருகே நேற்று மாலை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது மின்சாரம் தாக்கியதில் நான்கு குழந்தைகள் பலியாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான குழந்தைகள் மயங்க், ஹிமான்ஷி, ஹிமாங்க் மற்றும் மான்சி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என வட்ட அலுவலர் குமார் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "ஃபராட்டா" மின்விசிறிக்கு அருகே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மம்தா, நிதிஷ் புறக்கணிப்பு: இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:53:05 PM (IST)

தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:41:24 PM (IST)

புயல், வெள்ள மீட்பு பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல் காந்தி
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:41:45 PM (IST)

மீண்டும் புத்துயிர் பெறுவோம்; மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுவோம்- கார்கே உறுதி!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 10:21:41 AM (IST)

பணமோசடி வழக்கு : சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு
திங்கள் 4, டிசம்பர் 2023 4:52:09 PM (IST)

மிக்ஜம் புயல் பாதிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் அமித் ஷா பேச்சு!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:36:30 PM (IST)
