» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மின்சாரம் தாக்கி 4 குழந்தைகள் பலி: உத்திரப் பிரதேசத்தில் சோகம்
திங்கள் 20, நவம்பர் 2023 10:08:26 AM (IST)
உ.பி.யில் மின்விசிறி அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், பாரசக்வார் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் சரோஜ் வீட்டில் மின்விசிறி அருகே நேற்று மாலை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது மின்சாரம் தாக்கியதில் நான்கு குழந்தைகள் பலியாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான குழந்தைகள் மயங்க், ஹிமான்ஷி, ஹிமாங்க் மற்றும் மான்சி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என வட்ட அலுவலர் குமார் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "ஃபராட்டா" மின்விசிறிக்கு அருகே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை : நிர்மலா சீதாராமன்
சனி 7, பிப்ரவரி 2026 5:44:50 PM (IST)

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கான பாதிப்புகள்: ஜெய்ராம் ரமேஷ் பட்டியல்!
சனி 7, பிப்ரவரி 2026 4:59:53 PM (IST)

தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி ரூ.2.5 கோடி பறிப்பு : பெண் டிஎஸ்பி சஸ்பெண்ட்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 5:33:44 PM (IST)

பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் தாக்க திட்டமா? சபாநாயகர் புகாருக்கு காங். எம்.பி. சுதா மறுப்பு!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:00:00 PM (IST)

துணை வேந்தர்கள் நியமனம்: தமிழக அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடை ரத்து!
புதன் 4, பிப்ரவரி 2026 4:49:43 PM (IST)

அமெரிக்கா ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பா? மத்திய அரசு விளக்கம்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:52:14 PM (IST)

