» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார் : ராஜ்நாத் சிங் சொல்கிறார்
வெள்ளி 12, ஏப்ரல் 2024 10:17:58 AM (IST)
மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார். பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாள்ர்களிடம் அவர் கூறியதாவது "சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது யார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது. அவர் 3-வது முறையாக மட்டுமின்றி, 4-வது முறையும் பிரதமராக பதவியேற்பார். மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார்.
மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் பா.ஜ.க. நல்ல வாக்கு சதவீதத்தைப் பெறும். தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பா.ஜ.க. உழைத்து வருகிறது." இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீ விபத்தில் 8 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலி: ஹைதராபாத்தில் சோகம்
ஞாயிறு 18, மே 2025 9:25:13 PM (IST)

மத்திய அரசு அறிவித்த குழுவில் சசி தரூர் பெயர் இடம்பெற்றது நேர்மையற்றது: ஜெய்ராம் ரமேஷ்
சனி 17, மே 2025 4:49:28 PM (IST)

பாகிஸ்தானுக்கு நிதி அளிப்பது பயங்கரவாதத்துக்கு மறைமுக ஆதரவுக்கு சமம்: ராஜ்நாத் சிங்
சனி 17, மே 2025 12:03:28 PM (IST)

இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை: ப.சிதம்பரம் கவலை
வெள்ளி 16, மே 2025 4:36:27 PM (IST)

வங்கக்கடலில் ழூழ்கிய சரக்கு கப்பல்: மாலுமிகளை கடலோர காவல் படை பத்திரமாக மீட்பு!
வெள்ளி 16, மே 2025 12:16:43 PM (IST)
_1747289815.jpg)
ஆகம விதிக்குட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை!!
வியாழன் 15, மே 2025 11:47:14 AM (IST)
