» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் மருத்துவர் கொலை: 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:17:46 PM (IST)

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை எதிரொலியாக 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் நிலையில், பயிற்சி மருத்துவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதோடு, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களின் பொங்கல் பண்டிகை உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: பிரதமர் மோடி பேச்சு
புதன் 14, ஜனவரி 2026 12:04:17 PM (IST)
ஜனநாயகன் திரைப்படத்தை தடுக்க நினைப்பதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:20:12 PM (IST)

ஜன நாயகன் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்: பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 11:30:35 AM (IST)

இந்தியாவைவிட முக்கியமான நட்பு நாடு வேறு எதுவும் இல்லை: அமெரிக்க தூதர் செர்கியோ கோர்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:49:45 AM (IST)

அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை: தேவேந்திர பட்னாவிஸ்
செவ்வாய் 13, ஜனவரி 2026 10:45:15 AM (IST)

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
திங்கள் 12, ஜனவரி 2026 5:54:25 PM (IST)

