» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் மருத்துவர் கொலை: 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:17:46 PM (IST)

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை எதிரொலியாக 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் நிலையில், பயிற்சி மருத்துவர்கள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதோடு, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சனி 13, செப்டம்பர் 2025 12:51:08 PM (IST)

ஜக்கி வாசுதேவ் போன்ற போலி வீடியோ உருவாக்கி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி!
சனி 13, செப்டம்பர் 2025 12:30:17 PM (IST)

தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி விமர்சனம்
சனி 13, செப்டம்பர் 2025 12:06:12 PM (IST)
