» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)
அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசை வென்றுள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்.

இதுகுறித்த விவரம் வருமாறு: திருவனந்தபுரம் சிறையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் அலியார் குஞ்சு (வயது 61). இவருக்கு மனைவியும் 3 மகள்களும் உண்டு. இதில் 2 மகள்களுக்கு திருமணமானது. அலியார் குஞ்சு கடந்த 40 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வப்போது அபுதாபி பிக் லாட்டரி எடுப்பது வழக்கம்.
அதன்படி கடந்த 18-ந் தேதி ஆன்லைன் மூலம் லாட்டரி டிக்கெட்டை எடுத்தார். அவர் எடுத்த லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூ.57 கோடி கிடைத்தது. இதை அறிந்த அலியார் குஞ்சும் அவரது குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து அலியார் குஞ்சு கூறுகையில், 'நான் 40 ஆண்டுகள் சவுதியில் பணியாற்றி விட்டேன். இனி சொந்த ஊரில் சொந்தமாக தொழில் செய்யலாம் என உள்ளேன்' என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் நமது படைகளால் முறியடிக்கப்பட்டன: உமர் அப்துல்லா
வெள்ளி 9, மே 2025 5:52:30 PM (IST)

பாகிஸ்தானிற்கு நிதி வழங்குவதில் ஆழமான யோசனை தேவை : ஐஎம்எஃப்-க்கு இந்தியா வலியுறுத்தல்!
வெள்ளி 9, மே 2025 3:36:32 PM (IST)

தேசிய கல்விக் கொள்கையை எந்த மாநிலத்திலும் கட்டாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்
வெள்ளி 9, மே 2025 3:31:48 PM (IST)

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்: பிசிசிஐ அறிவிப்பு!
வெள்ளி 9, மே 2025 3:25:42 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 12:49:44 PM (IST)

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)
