» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் உணவு அளிக்கக் கூடாது? - உச்ச நீதிமன்றம் கேள்வி
புதன் 16, ஜூலை 2025 10:21:28 AM (IST)

தெரு நாய்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏன் உணவு அளிக்கக் கூடாது? என்று வழக்கு தொடர்ந்தவரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறும்போது, "தெருநாய்களுக்கு உணவளிப்பதற்காக தனியான இடங்களைத் தேர்வு செய்து அமல்படுத்த வேண்டும். கண்ட இடங்களில் தெருநாய்களுக்கு உணவு வழங்கக்கூடாது.
இதுதொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதில் நாங்கள் விதிகளை பின்பற்றுகிறோம். டெல்லி கிரேட்டர் நொய்டாவில் தெருநாய்களுக்கு வழங்க இதுபோன்ற உணவு மையங்கள் உருவாக்கப்பட்டாலும், நொய்டா அதிகாரிகள் இன்னும் அவற்றை செயல்படுத்தவில்லை.
எனவே, தெருநாய்களுக்கான உணவு மையங்களை அதிகாரிகள் உருவாக்கி பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்றார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விக்ரம் நாத், மனுதாரரின் வழக்கறிஞரை பார்த்து கேள்வியெழுப்பினார்.
அவர் கூறும்போது, "தெருநாய்களுக்கு இந்த நகரில் அனைத்து இடங்களும் உள்ளன. மனிதர்களுக்குத்தான் இல்லை. நாங்கள் உங்களுக்கு (மனுதாரர்) ஒரு யோசனையை வழங்குகிறோம். உங்கள் சொந்த வீட்டில் ஒரு தங்குமிடத்தைத் திறந்து வைத்து, இந்த சமூகத்தில் உள்ள அனைத்து நாய்களுக்கு உங்கள் வீட்டிலேயே உணவளிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
நீங்கள் காலையில் தினந்தோறும் சைக்கிள் ஓட்டி பயிற்சியில் ஈடுபடுகிறீர்களா? இந்தக் கேள்விக்குப் பதில் ஆமாம் என்றால் சைக்கிளில் செல்பவர்களும், காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் நாய்களால் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். தெருநாய்களால் அவர்களது வாழ்வுக்கு அதிக அச்சுறுத்தல் உள்ளது” என்றார்.
இதைத் தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதிகள், தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கிலும் இதேபோன்ற கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், இந்த மனுவை, முந்தைய மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீடியோவை காட்டி மிரட்டி கல்லூரி மாணவி பலாத்காரம்: பேராசிரியர்கள் உட்பட 3பேர் கைது!
புதன் 16, ஜூலை 2025 5:44:03 PM (IST)

நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானம்: பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு
புதன் 16, ஜூலை 2025 5:18:58 PM (IST)

சமோசா, ஜிலேபிக்கும் எச்சரிக்கை வாசகம்? - மத்திய சுகாதாரத்துறை மறுப்பு
புதன் 16, ஜூலை 2025 10:29:57 AM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:50:16 PM (IST)

வெற்றிகரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா : பிரதமர் மோடி வாழ்த்து!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:35:58 PM (IST)

பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:22:02 PM (IST)
