» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

சனி 17, ஜனவரி 2026 5:00:23 PM (IST)


நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை மேற்கு வங்கத்தின் மால்டா டவுன் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், அவர் கவுஹாத்தி – ஹவுரா இடையேயான வந்தே பாரத் படுக்கை வசதி வந்தே பாரத் ரயிலையும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அத்துடன், பிரதமர் மோடி காணொலி மூலம் நான்கு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் தொடங்கி வைத்தார்.

நவீன இந்தியாவின் வளர்ந்து வரும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட, முழுவதுமாக குளிரூட்டப்பட்ட இந்த வந்தே பாரத் படுக்கை வசதி ரயில், பயணிகளுக்கு சிக்கனமான கட்டணத்தில் விமானப் பயணம் போன்ற பயண அனுபவத்தை வழங்கும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நீண்ட தூரப் பயணங்களை வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும், மேலும் வசதியானதாகவும் மாற்றும் என்றும், ஹவுரா – கவுஹாத்தி வழித்தடத்தில் பயண நேரத்தை சுமார் 2.5 மணி நேரம் கணிசமாகக் குறைப்பதன் மூலம், இந்த ரயில் மதப் பயணம் மற்றும் சுற்றுலாவுக்கும் ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் மால்டாவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இணைப்பை வலுப்படுத்துவதையும், வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட, ரூ. 3,250 கோடி மதிப்புள்ள பல ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, பல திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory