» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

வெள்ளி 30, ஜனவரி 2026 10:30:01 AM (IST)

உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டை தடுத்து சமத்துவத்தை ஊக்குவிக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உருவாக்கிய புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக மிருத்துன்ஜய் இவாரி, வினீத் ஜிந்தர், ராகுல் இவான் தாக்கல் செய்த ரிட் மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் வாதிடும்போது, "யுஜிசியின் புதிய விதிமுறைகளின்படி சாதிய அடிப்படையிலான பாகுபாடு என்பது எஸ்சி, எஸ்டி, பிசி பிரிவு மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்கள் இந்த பாகுபாட்டில் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள விதிமுறையே பாகுபாடு பிரச்சினைகளை கையாள போதுமானதமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

மற்றொரு வழக்கறிஞர் நீரஜ் குமார் சிங் வாதிடும்போது, "யுஜிசியின் புதிய விதிமுறைகள் ராகிங் குறித்து எதுவும் பேசவில்லை. சாதிய அடிப்படையிலான பாகுபாடு குறித்து மட்டுமே பேசுகிறது" என்று தெரிவித்தார்.

ரோஹித் வெமூலா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய் சிங், யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு ஆதரவாக வாதிட்டார். புதிய விதிகளுக்கு இடைக்கால தடை விதிக்க தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி கூறியதாவது: சாதியற்ற சமூகத்தை சாதித்துள்ள நாம் பிற்போக்காளர்களாக மாறுகிறோமோ? சமூகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்கிறோம். சாதி மறுப்பு திருமணங்கள் நடந்து வருகின்றன. கடவுள் நிமித்தமாக இந்த பாகுபாட்டை செய்ய வேண்டாம். பாகுபாட்டை களைய ஏற்கவே விதிமுறைகள் இருக்கும்போது, புதிய விதிமுறைக்கான தேவை என்ன?

பல்கலைக்கழகங்களில் சமத்துவமான, சுதந்திரமான சூழலை உருவாக்க ஆலோசிக்கிறோம். புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டதற்கான முகாந்திரம் தெரியவில்லை. சமூகத்தை பிரித்தால் ஆபக்கான விளைவுகள் உருவாகும். யுஜிசியின் புதிய விதிமுறைகள் தெளிவாக இல்லை. இவை தவறான பயன்படுத்த வாய்ப்புள்ளது.

புதிய விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள நிபுணர்கள் ஆலோசனைகளை கூறலாம். தற்போதைய சூழலில் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். இந்த ரிட் மனுக்களுக்கு மத்திய அரசும், யுஜிசியும் விரிவான பதில் அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். இவ்வாறு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory