» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மகிழ்ச்சியும் வெற்றியும் பெருகட்டும்: பிரதமர் மோடி நெகிழ்ச்சியான தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:19:26 AM (IST)
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வாக்கிய முறைப்படி, 'விசுவாவசு' ஆண்டு நிறைவடைந்து, புதிய 'பராபவ' ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' (X) தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: "புனிதமான இந்தத் தமிழ் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், வெற்றியும், சிறந்த ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."
மேலும், இந்தப் பெருநாளின் சிறப்பைக் குறித்து அவர் கூறுகையில்: இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களுக்கான கொண்டாட்டமாகும். தமிழ்ப் பண்பாட்டின் இலக்கியம், இசை, கலை, தத்துவம் மற்றும் பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். "மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை எட்டுவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்" எனப் பிரதமர் மோடி தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுகவின் நோக்கம் அரசியல் ஆதாயம் மட்டுமே - முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:45:09 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம்: ராகுல் புறக்கணிப்பு? திமுக கூட்டணியில் சலசலப்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:32:03 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை!
சனி 11, ஏப்ரல் 2026 4:54:44 PM (IST)

உத்தரப் பிரதேசத்தில் பெருந்துயரம்: படகு கவிழ்ந்து பஞ்சாப் சுற்றுலா பயணிகள் 10 பேர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 3:59:52 PM (IST)

மும்பை விமான நிலையத்தில் 29 கிலோ தங்கம் பறிமுதல்: 24 வெளிநாட்டுப் பெண்கள் கைது!
சனி 11, ஏப்ரல் 2026 3:55:43 PM (IST)

கட்டுக்கட்டாகப் பணம் எரிந்த விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:23:06 PM (IST)

