» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!

வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் நிலவும் முறைகேடுகளைத் தவிர்க்கும் விதமாக, அடுத்த ஆண்டு முதல் இத்தேர்வை ஆன்லைன் முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வின் வினாத்தாள், ராஜஸ்தான் மாநிலத்தில் கசிந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தேர்வின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று அறிவித்தது.

ரத்து செய்யப்பட்ட தேர்வுக்குப் பதிலாக, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

வினாத்தாள் கசிவு தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: "தேசிய தேர்வு முகமையை மேலும் பலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ பாரபட்சமற்ற விசாரணையை நடத்தும். எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருக்க, அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory