» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காவிரி அணைகளைப் பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி : கர்நாடக முதல்வர் தகவல்!
வியாழன் 30, ஜூலை 2026 11:23:37 AM (IST)

காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக் கோரும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்துக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்களுடன் விவாதிக்க டெல்லி சென்றுள்ள கர்நாடகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமார், அங்குள்ள கர்நாடக பவனில் சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், கர்நாடக அணைகளில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது.ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே. சிவகுமார்: "தமிழகத்திற்குக் காவிரியில் தண்ணீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், நமது மாநிலத்தில் போதிய நீர் இல்லாததால், இந்த உத்தரவை எதிர்த்துக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யத் தீர்மானித்துள்ளோம். அட்வகேட் ஜெனரல், சட்ட நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வர் விஜய் என்னைச் சந்தித்துப் பேசுவதற்காக நமது தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், அவர் என்னுடன் தொலைபேசி வாயிலாகவும் பேசினார். அவருக்கு வழங்க வேண்டிய அரசு மரியாதையை வழங்கிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். நமது மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தினர்களைக் கௌரவத்துடன் வரவேற்பது நமது கடமையாகும்.
அவரை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். காவிரியிலுள்ள அணைப் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு விஜய்யிடம் கூறியுள்ளேன். அதற்குத் தேவையான ஹெலிகாப்டர் வசதியும் செய்து கொடுக்கப்படும். இங்குள்ள உண்மை நிலவரத்தை அவர் நேரில் அறிந்து கொள்ள வேண்டும். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்." என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனால் கலந்த பெட்ரோலால் இன்ஜின் சேதமடையாது : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:32:44 PM (IST)

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள்!
புதன் 29, ஜூலை 2026 5:01:11 PM (IST)

கேரளத்தில் அதிர்ச்சி : மாணவர்களுக்குப் போதைப் பொருள் விற்ற 3 பெண் ஆசிரியைகள் கைது!
புதன் 29, ஜூலை 2026 11:01:41 AM (IST)

இந்தியாவில் புழக்கத்திற்கு வருகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: காகித நோட்டுகள் செல்லுமா?
செவ்வாய் 28, ஜூலை 2026 5:43:22 PM (IST)

நீட் போராட்டம்: மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 28, ஜூலை 2026 5:14:11 PM (IST)

கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்: முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:54:10 PM (IST)


