» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிறுமிகள் பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு: ஹங்கேரி அதிபர் ராஜினாமா
திங்கள் 12, பிப்ரவரி 2024 8:13:47 AM (IST)
ஹங்கேரியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதற்காக அதிபர் கடாலின் நோவக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் அந்த நபருக்கு அதிபர் கடாலின் நோவக் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார். இதற்கு அப்போதைய சட்டத்துறை மந்திரியாக இருந்த ஜூடிட் வர்காவும் அனுமதி அளித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிபர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தநிலையில் அதிபர் கடாலின் நோவக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அரசு தொலைக்காட்சியில் அவர் பேசுகையில் `கருணையின் அடிப்படையிலும், அந்த நபர் குற்றத்தை செய்யவில்லை என தான் நம்பியதாலும் பொது மன்னிப்பு வழங்கினேன். ஆனால் நான் தவறு இழைத்து விட்டேன். அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுகிறேன். மேலும் நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என கூறினார்.
இதனைதொடர்ந்து அப்போது சட்டத்துறை மந்திரியாக இருந்த ஜூடிட் வர்காவும் தனது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவருக்கான பட்டியலில் உள்ளார். இது ஹங்கேரி நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு!
புதன் 2, ஜூலை 2025 5:14:15 PM (IST)

பகல்காம் தாக்குதல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவாட் அமைப்பு கூட்டறிக்கை
புதன் 2, ஜூலை 2025 10:56:21 AM (IST)

ராணுவ தளபதியை விமர்சித்த தாய்லாந்து பிரதமர் சஸ்பெண்ட்: அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி
புதன் 2, ஜூலை 2025 8:33:27 AM (IST)
