» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்காளதேசத்தில் வணிக வளாத்தில் பயங்கர தீ விபத்து: 43 பேர் பலி!
வெள்ளி 1, மார்ச் 2024 11:18:52 AM (IST)

வங்காளதேசத்தில் வணிக வளாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். 
 வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் பெய்லி சாலையில் 7 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகங்கள், உணவகங்கள், செல்போன் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள பிரியாணி கடையில் நேற்று இரவு 10 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரியாணி கடையில் பற்றிய தீ அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளத்திற்கு மளமளவென பரவியது. 
 இதில், அடுக்குமாடி கட்டிடத்தில் மேல்தளத்தில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்து குறித்து அறிந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிரியாணி கடையில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)

மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளுக்கு முழு ஆதரவு : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
சனி 25, அக்டோபர் 2025 5:46:24 PM (IST)




