» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை வீச்சு; 18 பேர் சாவு
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 12:00:23 PM (IST)

காசாவில் பள்ளி வளாகம் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனைதொடர்ந்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றுள்ள பணய கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது வாலிபர் ஒருவர் கூட்டத்துக்குள் திடீரென புகுந்து கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பாலஸ்தீன வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான் தாக்குதல் நடத்தியது. அங்கு பொது மக்கள் தஞ்சமடைந்துள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 18 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் மேற்கு கரையை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த தளபதி உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)





அதான்Aug 5, 2024 - 04:38:00 PM | Posted IP 172.7*****