» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தொழிலதிபர் அதானி மீதான முறைகேடு புகார் : அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட்
வியாழன் 21, நவம்பர் 2024 12:42:24 PM (IST)
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது.

அதானிக்கு எதிரான வழக்கு விவரங்கள் வருமாறு: அதானி குழும நிறுவனம், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள்(இந்திய மதிப்புப்படி ரூ. 2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக நியூயார்க் கோர்ட்டில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில், தாக்கல் செய்யப்பட்ட புகாரில், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 இடையேயான காலகட்டத்தில், ஒடிசா, தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர், சத்தீஷ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அரசின் உயர் அதிகாரிகளை பலமுறை, அதானியே நேரில் சந்தித்தற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கோர்ட்டில் கூறப்பட்டுள்ளது. நியூ யார்க் மாகாணத்தின் துணை அட்டர்னி ஜெனரல் லிசா மில்லர் என்பவர் தாக்கல் செய்த புகாரில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார். இந்த வழக்கில், கவுதம் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முறைகேடு புகாரை அடுத்து அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம் என அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முறைகேடு புகார் எழுந்த நிலையில், அதானி குழும நிறுவன பங்குகள் சுமார் 20 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. ஆசிய அளவிலும் அந்த நிறுவன பங்குகள் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பங்குகளின் மதிப்பு சுமார் 2 லட்சம் கோடியாக இருக்கும் என பங்குச்சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்ததுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசாவில் செலவினங்களை குறைக்க 2ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்? டிரம்ப் அதிரடி முடிவு!
வெள்ளி 11, ஜூலை 2025 10:30:06 AM (IST)

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

விசா இல்லாமல் பயணிக்க 74 புதிய நாடுகளுக்கு சீனா அனுமதி : பட்டியலில் இந்தியா இல்லை!!
புதன் 9, ஜூலை 2025 11:45:34 AM (IST)

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புகண்டனம்
திங்கள் 7, ஜூலை 2025 5:20:18 PM (IST)
