» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாம்பரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்: தெற்கு ரயில்வே தகவல்
வெள்ளி 25, நவம்பர் 2022 3:13:21 PM (IST)
தாம்பரம்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயிலை இயக்குவது என்று தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி எர்ணா குளத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு தாம்பரம் செல்லும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மாலை 3.40 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.
இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான் கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும். மேற்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்கான மகளிர் உதவி எண்.181 தொடர்புக் கொள்ளலாம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 9:23:51 PM (IST)

நாங்குநேரி மாணவர் மீது மீண்டும் தாக்குதல்: நெல்லை மாவட்ட காவல் துறை விளக்கம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:30:27 PM (IST)

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்: மாணவ, மாணவியர்கள் முன்பதிவு செய்யலாம்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 3:08:01 PM (IST)

ஜவுளிக்கடை அதிபர் தலை துண்டித்து கொலை : மனைவி கண் முன்னே மர்மகும்பல் வெறிச்செயல்
வியாழன் 17, ஏப்ரல் 2025 8:56:58 AM (IST)

திருநெல்வேலியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி பில் கலெக்டர் கைது!
புதன் 16, ஏப்ரல் 2025 5:21:22 PM (IST)

நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் மகளுக்கு வரதட்சணை கொடுமை: போலீசில் புகார்!
புதன் 16, ஏப்ரல் 2025 4:13:06 PM (IST)
