» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பிறந்தநாளுக்கு செல்போன் வாங்கி கொடுக்காததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!
திங்கள் 6, நவம்பர் 2023 8:29:54 AM (IST)
திசையன்விளையில் பிறந்த நாளுக்கு பெற்றோர் செல்போன் வாங்கி ெகாடுக்காததால், பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மகாதேவன்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். வாழை இலை வியாபாரி. இவருடைய மனைவி தங்கம். இவர்களுக்கு 2 மகன்களும், முத்து அரி (வயது 16) என்ற மகளும் உண்டு. அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் முத்து அரி பிளஸ்-1 படித்து வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் ஆகும். எனவே முத்து அரி தனக்கு பிறந்த நாள் பரிசாக செல்போன் வாங்கி தருமாறு பெற்றோரிடம் கேட்டார்.
அதற்கு பெற்றோர் தற்போது புதிதாக வீடு கட்டி வருவதால், பிறகு செல்போன் வாங்கி தருவதாக கூறினர். இதனால் மனமுடைந்த முத்து அரி நேற்று காலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முத்து அரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிறந்த நாளுக்கு பெற்றோர் செல்போன் வாங்கி கொடுக்காததால், பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
