» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிராம நிர்வாக அலுவலகம் மேற்குறை இடிந்து விழுந்ததில் கிராம நிர்வாக அலுவலர் காயம்!

திங்கள் 6, நவம்பர் 2023 8:32:38 PM (IST)



கடையநல்லூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்குறை இடிந்து விழுந்ததில் கிராம நிர்வாக அலுவலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது

தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடையநல்லூர் வட்டம், மலையடிக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கூரை தொடர் மழையால் நனைந்து, நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் கிராம நிர்வாக அலுவலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுபோல் மேலக் கடையநல்லூரில் அருள்மொழி என்பவருக்கு சொந்தமான பழமையான 2 வீடுகள் இடிந்து சேதம் ஆனது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory