» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இலஞ்சியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் துவக்கி வைத்தார்
செவ்வாய் 7, நவம்பர் 2023 10:04:47 AM (IST)

இலஞ்சியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் இலஞ்சி முதலாளி குடியிருப்பில் நடைபெற்ற தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்து கோமாரி பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரதிகளை வெளியிட்டார். கால்நடை நல அட்டைகளை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கினார்.
தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் 1.35 இலட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 46 குழுக்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சித்துறை, பால்வளம் மற்றும் ஆவின் உடன் இணைந்து செயலாற்ற உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் ஊரில் தடுப்பூசி போட குழுவினர் வரும்போது அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இம்முகாமில் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மு.மகேஷ்வரி, கால்நடை உதவி மருத்துவர்கள் வெள்ளைப் பாண்டி, .செல்வ குத்தாலிங்கம், சிவகுமார், புனிதா, அருண்பாண்டியன், கால்நடை ஆய்வாளர்கள். அருண்குமார், பூ மாரிசெல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாடசாமி, அந்தோணியம்மாள், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், துணை ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா, வார்டு உறுப்பினர் இராஜேஸ்வரி, வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன் பாத்திமா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
