» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
செவ்வாய் 7, நவம்பர் 2023 10:28:43 AM (IST)

நெல்லை தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மாநகர், புறநகர், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் என மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் முழு வீச்சில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாநகரில் மதியம் சுமார் 2 மணி நேரம் வரை பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.அதேநேரம் விடுமுறை நாள் என்பதாலும், தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே இருப்பதாலும் பஜார்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மழையால் ஆங்காங்கே அவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தென்காசியில் பெய்த கனமழையால் காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் தெப்பக்குளம் நிரம்பியது. பிரதான சாலைகளில் உள்ள சாக்கடை வடிகால் நிரம்பி மழை நீருடன் கலந்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
