» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மண்வெட்டியால் தாக்கி வாலிபர் கொலை: உறவினர் வெறிச்செயல்!

புதன் 8, நவம்பர் 2023 3:55:59 PM (IST)

களக்காடு அருகே காதல் திருமணம் விவகாரத்தில் நகையை கேட்டு தொந்தரவு செய்தால் வாலிபரை உறவினர் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர். 

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், மேல்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (40). தொழிலாளி. இவரது மனைவி சந்திரலேகா. கனகராஜின் தம்பி முத்துக்குமார் கோவையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமார் அதே பகுதியை சேர்ந்த நாராயண பெருமாள் (53) என்பவரது மகள் அனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் திருமணம் என்பதால் நாராயண பெருமாள் திருமணத்தின் போது, தனது மகளுக்கு நகைகள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் கனகராஜ் நகைகளை கேட்டு தகராறு செய்துள்ளார். நேற்று மாலை இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாராயண பெருமாள், கனகராஜை கம்பால் தாக்கினார். இதுபோல கனகராஜ், நாராயணபெருமாள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், அவரது மொபட்டையும் அடித்து நொறுக்கினார். இதுகுறித்து இருவரும் களக்காடு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையே கனகராஜூக்கும், நாராயண பெருமாளுக்கும் இரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாராயணபெருமாள், கனகராஜை மண்வெட்டியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நாராயணபெருமாளை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து

சாவட்டும்Nov 8, 2023 - 07:54:09 PM | Posted IP 108.1*****

நாய் போட்டு தள்ளுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory