» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரிக்கு 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து!
வெள்ளி 17, நவம்பர் 2023 7:45:18 PM (IST)

நெல்லை வண்ணார்ப்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி அகில இந்திய அளவில் 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது.
பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியானது 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் தொடர்ச்சியாக அதிகபட்ச அந்தஸ்தை பெற்று வருகிறது. அதற்கு காரணம், மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொழில் முனைவோரை உருவாக்குவது, அரசின் ஸ்டார்ட்அப் நிகழ்வில் பங்கேற்பது, லாபகரமான அறிவுசார் படைப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகள் அனைத்தும் அதிகமாக நடத்தப்படும் கல்லூரிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சகம் வழங்குகிறது.
எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி கல்லூரி மாணவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி மூலமாக தொழில் மானியம் பெறக்கூடிய சந்தர்ப்பங்களும், அதன் வாயிலாக புதிய தயாரிப்புகளை உருவாக்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது. கல்லூரியில் உள்ள 20 பயன்பாட்டு தொழிற்சாலை ஆய்வகங்கள் உள்ளடக்கிய இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை தயாரித்து உருவாக்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் போட்டி, தேசிய அளவிலான போட்டிகளில் பரிசுகள் வென்றுள்ளனர். ஆசிரியர்களும், மாணவர்களும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய கல்வி அமைச்சகம், அகில இந்திய அளவில் 3426 பொறியியல் கல்லூரி நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட 4 அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற்ற 142 கல்லூரிகள் பட்டியலில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இடம் பெற்றுள்ளது. 2018ம் ஆண்டு முதல் எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி தொடர்ந்து நட்சத்திர அந்தஸ்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி அதிகபட்ச நட்சத்திர அந்தஸ்து பெற ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள் K.ஜெயக்குமார், S.கிருஷ்ணகுமார், முதல்வர் V.வேல்முருகன், தொழில் முனைவோர் துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன் மற்றும் தொழில்முனைவோர் துறை துணை தலைவர் ராஜகுமார், கன்வீனர் பேராசிரியர் .பிரேம் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர்கள் உதவி பேராசிரியர்கள் மாரியம்மாள், மேரி சுமிதா, சங்கீதா, பாலாஜி, ஷிர்லி மிர்ட்டில், ராஜ பிரியா, சுப்புலக்ஷ்மி, சூரிய பிரபா, ஆர்த்தி உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும கல்லூரி நிறுவனர் S.கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

ah haNov 18, 2023 - 06:21:50 AM | Posted IP 172.7*****