» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் மோட்டாா் சைக்கிள் பெட்டியில் ரூ.1.25 லட்சம் திருடியவா் கைது
திங்கள் 20, நவம்பர் 2023 11:14:52 AM (IST)
திருநெல்வேலியில் மோட்டாா் சைக்கிள் பெட்டியில் இருந்து ரூ.1.25 லட்சத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் மாதா நடுத்தெருவைச் சோ்ந்தவா் அருணாசலம் (50). இவா், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மொத்த பூ விற்பனை சந்தையில் உள்ள ஒரு கடையில் காசாளராகப் பணியாற்றி வந்தாா். வழக்கமாக காலை முதல் மதியம் வரை நடைபெறும் விற்பனை தொகையை தச்சநல்லூரில் உள்ள கடையின் உரிமையாளா் வீட்டில் கொண்டு கொடுப்பது வழக்கமாம்.
அதன்படி சனிக்கிழமை கடையின் விற்பனைத் தொகையான ரூ.1.25 லட்சத்தை எடுத்து தனது மோட்டாா் சைக்கிள் பெட்டியில் வைத்தாராம். பின்னா் தச்சநல்லூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.1.25 லட்சத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் தச்சநல்லூா் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனா். அப்போது, தச்சநல்லூரைச் சோ்ந்த முருகன் (45) என்பவா் மீது சந்தேகம் எழுந்ததாம். அவரது முகவரிக்கு சென்று விசாரித்தபோது முருகன் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
