» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் மோட்டாா் சைக்கிள் பெட்டியில் ரூ.1.25 லட்சம் திருடியவா் கைது
திங்கள் 20, நவம்பர் 2023 11:14:52 AM (IST)
திருநெல்வேலியில் மோட்டாா் சைக்கிள் பெட்டியில் இருந்து ரூ.1.25 லட்சத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் மாதா நடுத்தெருவைச் சோ்ந்தவா் அருணாசலம் (50). இவா், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மொத்த பூ விற்பனை சந்தையில் உள்ள ஒரு கடையில் காசாளராகப் பணியாற்றி வந்தாா். வழக்கமாக காலை முதல் மதியம் வரை நடைபெறும் விற்பனை தொகையை தச்சநல்லூரில் உள்ள கடையின் உரிமையாளா் வீட்டில் கொண்டு கொடுப்பது வழக்கமாம்.
அதன்படி சனிக்கிழமை கடையின் விற்பனைத் தொகையான ரூ.1.25 லட்சத்தை எடுத்து தனது மோட்டாா் சைக்கிள் பெட்டியில் வைத்தாராம். பின்னா் தச்சநல்லூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.1.25 லட்சத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் தச்சநல்லூா் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனா். அப்போது, தச்சநல்லூரைச் சோ்ந்த முருகன் (45) என்பவா் மீது சந்தேகம் எழுந்ததாம். அவரது முகவரிக்கு சென்று விசாரித்தபோது முருகன் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)
