» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் மோட்டாா் சைக்கிள் பெட்டியில் ரூ.1.25 லட்சம் திருடியவா் கைது
திங்கள் 20, நவம்பர் 2023 11:14:52 AM (IST)
திருநெல்வேலியில் மோட்டாா் சைக்கிள் பெட்டியில் இருந்து ரூ.1.25 லட்சத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் மாதா நடுத்தெருவைச் சோ்ந்தவா் அருணாசலம் (50). இவா், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மொத்த பூ விற்பனை சந்தையில் உள்ள ஒரு கடையில் காசாளராகப் பணியாற்றி வந்தாா். வழக்கமாக காலை முதல் மதியம் வரை நடைபெறும் விற்பனை தொகையை தச்சநல்லூரில் உள்ள கடையின் உரிமையாளா் வீட்டில் கொண்டு கொடுப்பது வழக்கமாம்.
அதன்படி சனிக்கிழமை கடையின் விற்பனைத் தொகையான ரூ.1.25 லட்சத்தை எடுத்து தனது மோட்டாா் சைக்கிள் பெட்டியில் வைத்தாராம். பின்னா் தச்சநல்லூா் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.1.25 லட்சத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் தச்சநல்லூா் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனா். அப்போது, தச்சநல்லூரைச் சோ்ந்த முருகன் (45) என்பவா் மீது சந்தேகம் எழுந்ததாம். அவரது முகவரிக்கு சென்று விசாரித்தபோது முருகன் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் பதுங்கியிருந்த முருகனை போலீசார் கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)


