» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகள் நடத்த பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 24, நவம்பர் 2023 12:32:17 PM (IST)
குடியரசு தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் பள்ளி, கல்லூரிகள் டிச.7க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் 26.01.2024 அன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. விழாவின் போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளில் பராம்பரிய கலைகள், கலாச்சரம் மற்றும் பண்பாடு, அறிவியல் வளர்ச்சி, பல்துறை முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த விரும்பும் பள்ளி கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100 நபர்கள் ஒரு குழுவில் பங்கேற்க வேண்டும். நிகழ்ச்சி 7 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரிகள் தேர்வு செய்யப்படும் இசைத்தொகுப்பு/பாடல், கருப்பொருள் Concept உள்ளிட்ட விவரங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை டிசம்பர் 7, 2023-க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
