» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாட்கோ மூலம் ரூ.17.98கோடி கடன் வழங்கல் : நெல்லை மாவட்ட மேலாளர் தகவல்!
வெள்ளி 24, நவம்பர் 2023 4:49:17 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தாட்கோ மூலம் 543 பயனாளிகளுக்கு வங்கி கடனாக ரூ.17 கோடிய 98லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடனில் தாட்கோ மானியக்கடன் தொகையாக ரூ.7,36,39,000/- வழங்கப்பட்டுள்ளது என தாட்கோ மேலாளர் செல்வி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மக்களுக்கு தாட்கோ மூலம் இணையதளம் வாயிலாக http:/application.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாதம் ஒருமுறை நேர்காணல் நடத்தி அதில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து தகுதியிருப்பின் மானியம் வழங்கப்படுகிறது. பின்பு வங்கிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி அதன் மூலம் வங்கியில் படிவம்-3 பெறப்பட்ட பின்பு மேற்கண்ட மானியம் ஒரு லட்சத்துக்கு ரூ.30,000/- வீதம் (சதவீதம் 30மூ) அதிகபட்சம் ஆதிதிராவிடர்களுக்கு ரூ.2,25,000/-ம் மானியமும் பழங்குடியினருக்கு 35% அதிகபட்சமாக ரூ.3,75,000/-ம் வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் 277 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. 156 நபர்கள் கலந்து கொண்டார்கள் என்றும், அவ்விண்ணப்பங்களில் 111 நபர்களை வங்கிக்கு தேர்வு செய்து படிவம்-3 பெறப்பட்டு வங்கி கடன் ரூ.2,87,62,000/-ம் அதில் தாட்கோ மானியம் ரூ.13,750,000/- வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று 2022-23-ம் நிதியாண்டில் திட்டத்தின் கீழ் 530 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டு வங்கி மூலம் 300 (விண்ணப்பங்கள்) பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வங்கி கடனாக ரூ.9,98,78,000/-ம் வழங்கப்பட்டு தாட்கோ மூலம் மானியத் தொகை ரூ.3,94,46,000/-ம் வழங்கப்பட்டுள்ளது.
2023-24 நிதி ஆண்டில் 01.04.2023 முதல் 31.10.2023 வரை 7 மாதங்களில் 458 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 140 விண்ணப்பங்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர். இதில் மேற்கண்ட விண்ணப்பங்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டு வங்கியின் மூலம் 132 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் அவர்களுக்கு வங்கி கடனாக ரூ.5,12,45,000/-ம் தாட்கோ மானியத் தொகை ரூ.2,04,43,000/-ம் விடுவித்து ஆணையிடப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 543 பயனாளிகளுக்கு வங்கி கடனாக ரூ.17,98,85,000/-ம் வழங்கப்பட்டுள்ளது. அக்கடனில் தாட்கோ மானியக்கடன் தொகையாக ரூ.7,36,39,000/- வழங்கப்பட்டு 543 பயனாளிகளின் வாழ்வாதாரம் முன்னேறி உள்ளது.
தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவி குழு திட்டம் போன்ற திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் இணையதளம் வாயிலாக http:/application.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட தாட்கோ மேலாளர் செல்வி தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

Man kandan.kApr 28, 2025 - 11:03:36 AM | Posted IP 162.1*****