» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை தீவிரம் - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 3:21:12 PM (IST)
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று மாலை வரையிலும் கனமழை பெய்வதும். பின்பு மழை தணிவதுமாக இருந்தது. அங்குள்ள காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 37 மில்லிமீட்டரும், மற்ற 2 பகுதிகளிலும் தலா 32 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, களக்காடு, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. அதிக பட்சமாக சேரன்மகாதேவியில் 11.60 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில்1 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் 108 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 854 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 504 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 120 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.35 அடியாகவும் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி, தென்காசி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணை பகுதிகளிலும் மிதமான மழை பெய்ததால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்டவற்றில் அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
