» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:58:43 PM (IST)

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த கூத்தன்குழி மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிவாரண நிதியுதவியை சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது தவறி கடலில் விழுந்து கூத்தன்குழி மீனவ கிராமத்தை சார்ந்த பிச்சையா மகன் சிலுவை தஸ்நெவிஸ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலைியல் அவரது மனைவி ரோஜா என்பவருக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரிய விபத்து நிவாரணத்தொகையாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று கூத்தன்குழி மீனவ கிராமத்தில் நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இராதாபுரம் வட்டாட்சியர் இசக்கிபாண்டி, மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் இராஜதுரை, முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்காச்சோளத்தில் விஷம் வைத்து 50 மயில்கள் சாகடிப்பு : விவசாயி கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:52:16 PM (IST)

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி உத்தரவு
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:45:38 PM (IST)

வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வன ஊழியர் கைது!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 1:44:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 25, அக்டோபர் 2025 4:18:40 PM (IST)

நெல்லையில் பெண் பயணியை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்
சனி 25, அக்டோபர் 2025 8:36:18 AM (IST)

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)




