» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:58:43 PM (IST)

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த கூத்தன்குழி மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிவாரண நிதியுதவியை சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது தவறி கடலில் விழுந்து கூத்தன்குழி மீனவ கிராமத்தை சார்ந்த பிச்சையா மகன் சிலுவை தஸ்நெவிஸ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலைியல் அவரது மனைவி ரோஜா என்பவருக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரிய விபத்து நிவாரணத்தொகையாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று கூத்தன்குழி மீனவ கிராமத்தில் நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இராதாபுரம் வட்டாட்சியர் இசக்கிபாண்டி, மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் இராஜதுரை, முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
