» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:58:43 PM (IST)

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த கூத்தன்குழி மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிவாரண நிதியுதவியை சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது தவறி கடலில் விழுந்து கூத்தன்குழி மீனவ கிராமத்தை சார்ந்த பிச்சையா மகன் சிலுவை தஸ்நெவிஸ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலைியல் அவரது மனைவி ரோஜா என்பவருக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரிய விபத்து நிவாரணத்தொகையாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று கூத்தன்குழி மீனவ கிராமத்தில் நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இராதாபுரம் வட்டாட்சியர் இசக்கிபாண்டி, மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் இராஜதுரை, முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீவிபத்து எதிரொலி : அனுமதியின்றி இயங்கிய தீப்பெட்டி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 12:02:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)
