» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கடலில் தவறிவிழுந்து மீனவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 4, டிசம்பர் 2023 4:58:43 PM (IST)

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த கூத்தன்குழி மீனவர் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சம் நிவாரண நிதியுதவியை சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது தவறி கடலில் விழுந்து கூத்தன்குழி மீனவ கிராமத்தை சார்ந்த பிச்சையா மகன் சிலுவை தஸ்நெவிஸ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலைியல் அவரது மனைவி ரோஜா என்பவருக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரிய விபத்து நிவாரணத்தொகையாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று கூத்தன்குழி மீனவ கிராமத்தில் நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இராதாபுரம் வட்டாட்சியர் இசக்கிபாண்டி, மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் இராஜதுரை, முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

நரிக்குறவர் சமூக மக்களிடையே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:35:37 PM (IST)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை!
வெள்ளி 27, மார்ச் 2026 12:29:29 PM (IST)

அம்பை கோயில் கும்பாபிஷேக விழா: நகை பறிக்க முயன்ற 5 பெண்கள் கைது!
வெள்ளி 27, மார்ச் 2026 8:46:14 AM (IST)

பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி: மென்பொருள் பொறியாளர், நண்பர் கைது!
வியாழன் 26, மார்ச் 2026 8:41:00 AM (IST)

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ஆம் தேதி நெல்லையில் மதுக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
புதன் 25, மார்ச் 2026 5:48:47 PM (IST)

