» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு
சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)
நெல்லையில் கிறிஸ்துமஸ் விருந்தில் ஏற்பட்ட தகராறில் உறவினர் காதை போலீஸ் ஏட்டு கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாநகர போலீசில் ஏட்டாக பணியாற்றி வருபவர் டைசன் துரை (37). இவர் நெல்லை மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் விடுமுறையில் சென்ற அவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை அருகே பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் மது விருந்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அந்த விருந்தில் டைசன்துரையின் சகலை முறை உறவினரான மெல்வின் (32) என்பவரும் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். மெல்வினின் நண்பர்களிடம் டைசன்துரை பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. உடனே மெல்வின், டைசன்துரையை சமாதானப்படுத்த முயன்றார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த டைசன்துரை அங்கு காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து மெல்வினின் காதில் வெட்டினார். இதில் அவருக்கு காதில் சிறிய ரத்தக்காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மெல்வின் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் டைசன்துரை மீது ஆபாசமாக பேசி, ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லையில் கிறிஸ்துமஸ் விருந்தில் ஏற்பட்ட தகராறில் உறவினரின் காதை போலீஸ் ஏட்டு கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அரசு டவுன் பஸ்சில் முதல் பெண் கண்டக்டர்
சனி 27, டிசம்பர் 2025 8:51:46 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் 310.45 மி.மீ மழை பெய்துள்ளது: ஆட்சியர் தகவல்
வெள்ளி 26, டிசம்பர் 2025 5:24:20 PM (IST)

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

