» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!

திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)



திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா  நடைபெற்றது. 

கல்லிடைக்குறிச்சி கீழதைக்கால் தெரு ரஹ்மத் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் நூருல் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக். அண்மையில் இக்கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு நடைபெற்றது. சிறப்பாக பணி செய்து வரும் ரஹ்மத் ரபீக்க்கு, ஜமாத் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவர் அ. நாகூர்கனி, பொன்னாடை அணிவித்து பாராட்டினார். 

இதில், ஜமாத் பொருளாளர் என். அஜீஸ், தணிக்கையாளர் கே.பி.எஸ். முகம்மது உசேன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம். ரஹ்மத் புகாரி, எம். ஷேக்மைதீன், பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். முகம்மது முஜம்மில், துணை இமாம் அ. தாஜூத்தீன், ஜமாத் முன்னாள் தலைவர் என். நாகூர்மைதீன், மு. பீர்முகம்மது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

முகவை சித்தாரிFeb 9, 2026 - 07:01:57 PM | Posted IP 172.7*****

மாஷா அல்லாஹ்🥰 அல்ஹம்துலில்லாஹ்🥰

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory