» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை!!
திங்கள் 4, மார்ச் 2024 9:51:23 AM (IST)
வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நாராணபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கையா தேவர் மகன் ராமகிருஷ்ணன் (58). விவசாயி . இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரின் நாலு பிள்ளைகளில் ஒரு மகன் ஊட்டி போலீசில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
நேற்று உறவினர் இறந்ததற்கான விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ராமகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக மது குடித்தருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் (பொ) சண்முக லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
