» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை!!
திங்கள் 4, மார்ச் 2024 9:51:23 AM (IST)
வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நாராணபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கையா தேவர் மகன் ராமகிருஷ்ணன் (58). விவசாயி . இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரின் நாலு பிள்ளைகளில் ஒரு மகன் ஊட்டி போலீசில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
நேற்று உறவினர் இறந்ததற்கான விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ராமகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக மது குடித்தருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் (பொ) சண்முக லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவில் இணைந்த நெல்லை, தூத்துக்குடி முக்கியப் பிரமுகர்கள்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:26:02 AM (IST)

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் - 12 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!
வியாழன் 19, மார்ச் 2026 5:40:58 PM (IST)

தவெக-வுடன் கூட்டணி பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 19, மார்ச் 2026 4:23:10 PM (IST)

நெல்லையில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 3:28:49 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!
புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)

