» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை!!
திங்கள் 4, மார்ச் 2024 9:51:23 AM (IST)
வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நாராணபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கையா தேவர் மகன் ராமகிருஷ்ணன் (58). விவசாயி . இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரின் நாலு பிள்ளைகளில் ஒரு மகன் ஊட்டி போலீசில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
நேற்று உறவினர் இறந்ததற்கான விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ராமகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக மது குடித்தருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் (பொ) சண்முக லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)

