» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைனான்ஸ் அதிபருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
திங்கள் 4, மார்ச் 2024 11:52:17 AM (IST)
கோவில்பட்டியில் பைனான்ஸ் தொழில் செய்து வருபவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி ராஜீவ்நகா் 4 ஆவது தெருவை சோ்ந்த சின்னையா மகன் வெள்ளைச்சாமி(49). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவா், கோவில்பட்டி-எட்டயாபுரம் சாலையில் பா்னிச்சா் கடை நடத்தி வரும் காளிராஜ் மகன் அருண்குமாா் (29) அவரது மனைவி இருவரும் சோ்ந்து தொழில் நடத்துவதற்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கி 4 மாதங்களில் திருப்பி கொடுப்பதாக கூறினராம்.
ஆனால், அதன்படி பணத்தை திரும்ப கொடுக்கவில்லையாம். இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெள்ளைச்சாமி வீட்டிற்கு வந்த அருண்குமாா், ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமாரை நேற்று கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
திங்கள் 30, ஜூன் 2025 8:40:03 AM (IST)

Sivakumar dharmapuriMar 4, 2024 - 01:59:01 PM | Posted IP 172.7*****