» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைனான்ஸ் அதிபருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
திங்கள் 4, மார்ச் 2024 11:52:17 AM (IST)
கோவில்பட்டியில் பைனான்ஸ் தொழில் செய்து வருபவருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி ராஜீவ்நகா் 4 ஆவது தெருவை சோ்ந்த சின்னையா மகன் வெள்ளைச்சாமி(49). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவா், கோவில்பட்டி-எட்டயாபுரம் சாலையில் பா்னிச்சா் கடை நடத்தி வரும் காளிராஜ் மகன் அருண்குமாா் (29) அவரது மனைவி இருவரும் சோ்ந்து தொழில் நடத்துவதற்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கி 4 மாதங்களில் திருப்பி கொடுப்பதாக கூறினராம்.
ஆனால், அதன்படி பணத்தை திரும்ப கொடுக்கவில்லையாம். இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெள்ளைச்சாமி வீட்டிற்கு வந்த அருண்குமாா், ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமாரை நேற்று கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)


Sivakumar dharmapuriMar 4, 2024 - 01:59:01 PM | Posted IP 172.7*****