» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை-நாகர்கோவில் இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்கள் ரத்து
வெள்ளி 29, மார்ச் 2024 8:28:48 AM (IST)
நெல்லை- நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆரல்வாய்மொழி- கன்னியாகுமரி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை சில ரயில்கள் ரத்துசெய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணி மற்றும் இரவு 6.50 மணிக்கு புறப்பட்டு, நெல்லை வரும் முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
அதே போல, கன்னியாகுமரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் நாளை (சனிக்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. அதே தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறபட்டு, கன்னியாகுமரி வரும் சிறப்பு ரயிலும் ரத்துசெய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்டு, கன்னியாகுமரி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது. அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு, கொச்சுவேலி வரும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் (20691) வருகிற 31-ந்தேதி வரை நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. அதே போல, சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவில் வரும் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12689) இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது.
நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் செல்லும் அந்தியோதியா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இன்று முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை நெல்லையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும். அதே போல நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரல் வரும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12690) மார்ச் 31-ந்தேதி மட்டும் நெல்லையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/nellaimprailwayminister_1722060273.jpg)
நெல்லையில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை!
சனி 27, ஜூலை 2024 11:33:43 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/kutralam43i34icoll_1722059086.jpg)
திருநங்கையின் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்: நீதிபதிகள் பங்கேற்பு
சனி 27, ஜூலை 2024 11:13:53 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/lokada43_1722058816.jpg)
தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: 19 வழக்குகள் தீர்வு
சனி 27, ஜூலை 2024 11:09:39 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/itiadmissiononline_1721969913.jpg)
ஐடிஐயில் நேரடி சேர்க்கை ஜீலை 31 வரை நீடிப்பு : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!
வெள்ளி 26, ஜூலை 2024 10:27:41 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/natarajannellai_1721892258.jpg)
நடராஜன் 4 விக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் திரில் வெற்றி!
வியாழன் 25, ஜூலை 2024 12:54:49 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/arrestjyl_1721889831.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்லை ரவுடிக்கு தொடர்பு இல்லை - எஸ்பி விளக்கம்
வியாழன் 25, ஜூலை 2024 12:13:59 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/disablecamp_1721795892.jpg)