» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ராஜா எம்.எல்.ஏ., காரை சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்
திங்கள் 1, ஏப்ரல் 2024 3:06:18 PM (IST)
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா புளியங்குடி சாலையில் காரில் சென்ற போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராதா தலைமையிலான குழுவினர் தடுத்து நிறுத்தினர். அக் காரை பறக்கும் படையினர் முழுமையாக சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எதிர் கட்சிகளின் நிர்வாகிகள், வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கமல் கிஷோருக்கு புகார் மனுக்களை அனுப்பினர்.
இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடத்திய விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்யாதது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் வட்டார வளர்ச்சி அலுவலருமான ராதாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
