» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ராஜா எம்.எல்.ஏ., காரை சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்
திங்கள் 1, ஏப்ரல் 2024 3:06:18 PM (IST)
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா புளியங்குடி சாலையில் காரில் சென்ற போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராதா தலைமையிலான குழுவினர் தடுத்து நிறுத்தினர். அக் காரை பறக்கும் படையினர் முழுமையாக சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எதிர் கட்சிகளின் நிர்வாகிகள், வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கமல் கிஷோருக்கு புகார் மனுக்களை அனுப்பினர்.
இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடத்திய விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்யாதது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் வட்டார வளர்ச்சி அலுவலருமான ராதாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
