» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ராஜா எம்.எல்.ஏ., காரை சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்
திங்கள் 1, ஏப்ரல் 2024 3:06:18 PM (IST)
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா புளியங்குடி சாலையில் காரில் சென்ற போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராதா தலைமையிலான குழுவினர் தடுத்து நிறுத்தினர். அக் காரை பறக்கும் படையினர் முழுமையாக சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எதிர் கட்சிகளின் நிர்வாகிகள், வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கமல் கிஷோருக்கு புகார் மனுக்களை அனுப்பினர்.
இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடத்திய விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்யாதது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் வட்டார வளர்ச்சி அலுவலருமான ராதாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

மாணவிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: நெல்லை அருகே சிக்கிய பேராசிரியர்
சனி 28, மார்ச் 2026 11:41:58 AM (IST)

புதுப்பொலிவு பெறும் பழைய குற்றால அருவி : விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 28, மார்ச் 2026 10:26:53 AM (IST)

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

