» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ராஜா எம்.எல்.ஏ., காரை சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்
திங்கள் 1, ஏப்ரல் 2024 3:06:18 PM (IST)
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா புளியங்குடி சாலையில் காரில் சென்ற போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராதா தலைமையிலான குழுவினர் தடுத்து நிறுத்தினர். அக் காரை பறக்கும் படையினர் முழுமையாக சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எதிர் கட்சிகளின் நிர்வாகிகள், வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கமல் கிஷோருக்கு புகார் மனுக்களை அனுப்பினர்.
இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடத்திய விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்யாதது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் வட்டார வளர்ச்சி அலுவலருமான ராதாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)

கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும் சி.பி.ஐ. வழக்கு தொடரும் : நெல்லையில் சீமான் பேட்டி!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:10:51 PM (IST)

நெல்லை மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:21:12 AM (IST)




