» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
லாரி டிரைவர் குத்திக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
செவ்வாய் 21, மே 2024 8:13:35 AM (IST)
ஆலங்குளம் அருகே லாரி டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை வடக்கு காலனியை சேர்ந்தவர் ராமையா மகன் பேச்சிக்குட்டி (23). லாரி டிரைவரான இவரும், இவரது நண்பர்களும் கடந்த 18-ந் தேதி வீட்டின் அருகே மது அருந்தி உள்ளனர். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில் சண்முகையா, சுரேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் சண்முகையா தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இருதரப்பினரையும் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு சண்முகையாவின் உறவினர்கள் சிலர் பேச்சிக்குட்டியின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர். இதனை கண்ட பேச்சிக்குட்டிக்கும், சண்முகையா உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் சண்முகையா தரப்பினர் பேச்சிக்குட்டியின் இடுப்பில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பேச்சிக்குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சண்முகையாவின் உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா மகன் ஜெயராம் (26), ஆறுமுகம் (47), மகாராஜன், மகேஷ் மற்றும் 17 வயது நிரம்பிய சிறுவன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து பேச்சிக்குட்டியை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து கொலையாளிகளை போலீசார் தேடிய நிலையில் ஜெயராம், ஆறுமுகம் மற்றும் சிறுவனை நேற்று கைது செய்தனர். மகாராஜன், மகேஷ் உள்ளிட்ட சிலரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆய்வு
புதன் 1, ஏப்ரல் 2026 4:43:34 PM (IST)
_1775022580.jpg)
நெல்லையில் ஏப்.3-ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: இரண்டாம் கட்ட பயண விவரம் வெளியீடு!
புதன் 1, ஏப்ரல் 2026 11:19:44 AM (IST)

நெல்லை தம்பதியிடம் 15 பவுன் நகை பறிப்பு: தானே ரயில் நிலையத்தில் துணிகரம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:35:50 AM (IST)

நெல்லையில் 2½ வயது பெண் குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ விசாரணை!
புதன் 1, ஏப்ரல் 2026 8:13:11 AM (IST)

எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)

தென்காசி அருகே கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் சாம்பல்- வனவிலங்குகள் பாதிப்பு?
திங்கள் 30, மார்ச் 2026 9:41:38 AM (IST)

