» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
லாரி டிரைவர் குத்திக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
செவ்வாய் 21, மே 2024 8:13:35 AM (IST)
ஆலங்குளம் அருகே லாரி டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை வடக்கு காலனியை சேர்ந்தவர் ராமையா மகன் பேச்சிக்குட்டி (23). லாரி டிரைவரான இவரும், இவரது நண்பர்களும் கடந்த 18-ந் தேதி வீட்டின் அருகே மது அருந்தி உள்ளனர். இதனை பார்த்ததும் பக்கத்து வீட்டை சேர்ந்த சண்முகையா மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில் சண்முகையா, சுரேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் சண்முகையா தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இருதரப்பினரையும் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு சண்முகையாவின் உறவினர்கள் சிலர் பேச்சிக்குட்டியின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தனர். இதனை கண்ட பேச்சிக்குட்டிக்கும், சண்முகையா உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் சண்முகையா தரப்பினர் பேச்சிக்குட்டியின் இடுப்பில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பேச்சிக்குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சண்முகையாவின் உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா மகன் ஜெயராம் (26), ஆறுமுகம் (47), மகாராஜன், மகேஷ் மற்றும் 17 வயது நிரம்பிய சிறுவன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து பேச்சிக்குட்டியை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து கொலையாளிகளை போலீசார் தேடிய நிலையில் ஜெயராம், ஆறுமுகம் மற்றும் சிறுவனை நேற்று கைது செய்தனர். மகாராஜன், மகேஷ் உள்ளிட்ட சிலரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு அலுவலகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் : அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:44:21 AM (IST)

பாளை சதக்கத்துல்லா கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி
வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:16:26 AM (IST)

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)
